இந்த கேள்வி நசிகேதன் காலம் முதல் கேட்கப்பட்ட கேள்வி என்றாலும் போன வாரம் நான் கேட்க வேண்டி வந்தது. எங்கள் குடும்ப நண்பரின் மகன் விபத்தில் பலியான போது நான் மிகவும் வருந்தி கேட்டேன். இதை பற்றி நம் முன்னோர்கள் என்ன சொல்றாங்க என்று பார்த்தால் ஆன்மாவுக்கு அழிவு இல்லை என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் உறவுக்கு அழிவு தானே. அப்பா உறவுகள் எல்லாம் பொய்யானு தோணுது. சமீப காலமா இடுகாடுகள் புனரமிக்கும் பணி தொடங்கியதில் இருந்து மரணத்தை பற்றிய என்னோட பார்வை மாறிடுச்சு.எனக்கேன்னாவ் மரணத்தை பார்த்து பயப்படுவது தேவையில்லாதது என்றே தோன்றுகிறது. மரணத்தை அது வரும் போது எதிர்கொள்வோம். அதுவரை மரணத்தை போற்றுவோம்.
Filed under:
Subscribe to:
Post Comments (Atom)

Unknown Says:
good..
Posted on July 20, 2010 at 7:17 AM