சிலைகள் தேவையா?

சமிபத்தில் தேவர் சிலையே சேதபடுத்த முயன்றதாக சில பேரை கைது பண்ணிருந்தாங்க . இதே காரணத்துக்காக தென் மாவட்டங்கள்ல பெரிய கலவரம் சில ஆண்டுகள் முன்னாடி ஏற்பட்டது நினைவு இருக்கலாம். இந்த நிலை தொடர்ந்தால் மொத்த காவல்துறையுமே சிலைகள பாதுகாக்க அனுப்ப வேண்டியதாக இருக்கும் .அரசு புதிய சிலைகளை வைக்க அனுமதி வழங்கும் முன் இந்த விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். முன்பு கலவரம் ஏற்பட்ட போது மாவட்ட பெயர்களையும் பேருந்து பெயர்களையும் மாற்றியது போல இந்த விஷயத்திலும் தெளிவான முடிவே எடுக்க வேண்டும்.பகுத்தறிவு பேசும் நம் தலைவர்கள் இந்த உருவ வழிபாட்டை கண்டிப்பா நிறுத்தனும். அப்படி கண்டிப்பா வேணும்னா ஒரு கோவில் மதிரிய iல்லை நினைவாலயம் மாதிரியோ மட்டும் வைக்க அனுமதி அளிக்கலாம்.இதன்னால பிரச்சனைல குளிர்காய நினைக்கும் சில சில்லறை அரசியல் வியாதிகள் கொட்டாத அடக்கலாம்.

0 comments: